Wednesday, October 28, 2009

யாரோவிற்க்கு

.என் இதய குன்டத்தில்

வார்த்தை நெய் ஊற்றி

கவிதை யாகம் வளர்க்கிறேன்

உன்க்கான

கவிஞனாக வேண்டுமென....





உருவம் தெரியாதவளே

ஒவ்வொரு முறையும் கரைகிறேன்

பேனாவின் மையுடன் சேர்த்து நானும்

உன்ககான் கவிதை உருவாகும் போது




வார்த்தை பூக்கள் சேர்த்து

கவிதை மாலை தொடுத்து விட்டேன்

சூடிகொள்ளத்தான் நீயில்லை


தெப்ப்மாகியது என் தொண்டைக் குழி

உன்னிடம் பேசாத வார்த்தைகள்தேங்கியதால் -

அதில் இறந்து போனவை சில

கடைசி மூச்சுடன் பல





பிழையும் நட்பும்

1.அழைத்தும் வரவில்லை சோகஙள்

அழையாமல் வருகின்றன சுகங்கள்

உன்னுடன் கை கோர்க்கையில்

2.சோகங்கள் எழுத்து பிழைபெற்று

சுகங்களாய் பதிகிறது என் அகராதியில்

நட்பை வாசித்து விட்டதால்




நட்பு


தமிழ் பிடித்தது
நட்பாராந்த பொழுது
தமிழ் அழகானது
உன்னிடம் அதை
பகிர்ந்த பொழுது

நட்பே

நீ ஒன்றும் கடல் அலை அன்று

கரை தொட்டு உடனே செல்வதற்கு

இமை அல்ல ஒரு நாள் அனைவதற்கு

சுவாசமும் அல்ல ஒரு நாள் ஓய்வெடுப்பதற்கு

உதவி அல்லநன்றி சொல்வதற்கு

நீ இரு வேறு பொருள்களுக்கான ஒப்பந்தம் அல்ல

நீ வரையிருக்க முடியா வரைமுரை